தலைமையில் திருவாரூரில் விவசாயிகள்
மரபணு மாற்ற விதைகளுக்கு எதிர்ப்பு
இந்தியாவில், பயிர் மற்றும் விதைகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை நிரந்தரமாக புறக்கணிக்க வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ரயில்நிலையம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் தலைமை வகித்தார். இதில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் மான்சான்டோ நிறுவனத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை சட்டபூர்வமாக்கும் உயிரி தொழில்நுட்ப ஒழுங்காற்றுச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.