மத்திய அரசின் தேசிய நீர் கொள்கை !

தேசிய நீர் கொள்கை வரைவு 2012 (Draft National Water Policy 2012) என்ற வரைவு இந்திய அரசின் நீர்வள அமைச்சகம் 31/01/2012 தேதியிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. 
            தண்ணீரை முழுவதுமாக தனியார் மயமாக்குவதே இதன் அடிப்படை கொள்ளையாகும்.
             மனிதர்கள் உயிர் வாழ்வதற்க்கும், சுற்றுச்சூழல் உயிர்ப்புடன் இருப்பதற்க்கும் குறைந்தபட்ச தேவையான தண்ணீரை தவிர மற்ற தண்ணீரையெல்லாம் பொருளியல் வளமாக (Economic Good) எடுத்த கொள்ளப்படும் என்று பத்தி 3.3ன் வரைவில் தேசிய நீர் கொள்கை கூறுகிறது. 
            குறைந்தபட்ச தேவையான நீர் வழங்கள் கூட தனியார் கம்பெனிகளின் மூலமாகவே நடத்தப்படவோண்டும் என இக்கொள்கை வரைவு தயாரித்திருப்பது நீர்வளம் முழுவதும் வணிக சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது வரைவின் பத்தி 13.4ன் மூலம் உறுதிசெய்கிறது.
            தேசிய நீர் கொள்கை வரைவின் பிரிவு 7ல் தண்ணீருக்கு விலை நிர்னயம் செய்வது பற்றி சொல்கிறது. காசு இல்லாமல் ஒரு குவளை தண்ணீர் கூட வழங்ககூடாது என்று வலியுறுத்துகிறது. 
             மானிய விலையிலோ விலையின்றியோ / மின்சாரத்தையோ, தண்ணீரையோ, வழங்கும் தற்போதைய நிலை உடனடியாக முற்றிலும் கைவிடப்பட வேண்டும். அப்படி கொடுத்தால் நீர்ரையும், மின்சாரத்தையும் வீணடிப்பதற்கு வழி வகுக்கிறது என இக்கொள்கை வரைவின் பத்தி 7.5ல் அரசைக் கடிந்து கொள்கிறது.
              தண்ணீர் திட்டங்கள் வேளாண்மையும், குடிநீர் வழங்கலையும் முதன்மை இலட்சியமாக கொள்ளக்கூடாது. மாறாக பல்நோக்குக் திட்டங்களாக நீர் மேளாண்மைத் திட்டங்கள் மறுவரையறை ஆக்க வேண்டும். என தேசிய நீர்க்கொள்கை வரைவின் பத்தி 9.5 அரசுக்குக் கட்டளையிடுகிறது.
             இவர்கள் யார் ? இயற்கையை வரையறைக்க ! ஆட்சியாளர்களே ! விரைவில் சுனாமி வரப்போகிறது அந்த சுனாமின் நீரை பொருளியல் வலமாக (Economic Good)  மாற்றுங்களேன் பார்க்கலாம் ?
              மக்களே (இளஞர்களே) விழித்தெழுங்கள் வருங்காள இந்திய அரசியலில் நல்ல பலமான மாற்றத்தை ஏற்றபடுத்துங்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து nwp2012-mowr@nic.in என்ற மின் அஞ்சலுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள்.
                                                                                 -பசுமை நாயகன்