கரூர் அரசு கலைக்கல்லூரி தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத விடுதி காப்பாளரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நல அலுவலகர் ராமசாமி சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவிகள் அவரது அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். அடிப்படை வசதிகள் கோரி பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டினர்.
-சந்திரசேகர்