நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

   கரூர் அருகே மணவாடி பகுதியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கூலித் தொழிலாளி ஜெயராமன் என்பவரது மகனான சுதாகரன், நேற்று தனது நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.
நீச்சல் தெரியாத நிலையில், குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றதால், சுதாகரன் நீரில் மூழ்கி உள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர். சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.